மத்தியப் பிரதேச மாநிலத்தில் 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் பெதுலில், கடந்த 6-ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள வயலில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தன்மேய் சாஹூ, 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், பொக்லைன் இயந்திரம் கொண்டு 25 அடி வரை குழி தோண்டப்பட்டு, சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்தது. ஆனால், நேற்று சிறுவனிடமிருந்து எந்த சத்தமும் வராததால், மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்றது. இதையடுத்து, இன்று காலை 5 மணியளவில், அச்சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.